இயன்றவரை முயன்றேன்


இயன்றவரை முயன்றேன்
உன் நினைவுகளை என்னுள்ளிருந்து எடுக்க..
என் சந்தோஷத்தில் தான்
உன் பெயரை உச்சரிக்கிறேன் என்றால்..
என் சோகத்திலும் உன் பெயரையே உச்சரிக்கின்றேன்..

நினைக்க வேண்டுமென நினைக்கும்போதைவிட,
மறக்க வேண்டுமென நினைக்கும் போதுதான் உணர்ந்தேன்,
உன் நினைவுகளையே சுவாசிக்கின்றேன் என்று..
என் உயிருடன் ஒன்றான
உன் நினைவுகளை எடுக்க இனியும் இயலாது...