காத்திருக்கிறேன்



இன்று,
கண்காணா எல்லையில்
நான் இருந்தாலும்...,


என் காட்சிகள்,
என்னவோ நீயாகவே....!


என் வருடங்கள் சுருங்கி,
தேகம் வதங்கினாலும்,


நினைவுகள் வதங்காமல்
நம் நாட்களைப் பூமாலையாக்கி
காத்திருக்கிறேன்.....!!


உன் வரவிற்காக.....................!!!

காதல் கவிதைகள்




கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலைஅழகோ
பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புனலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரிலிங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்து கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திட‌