திட்டவட்டமான விதிகள்


திட்டவட்டமான விதிகள் இல்லை
ஜன்னலை எப்போது
திறந்து வைப்பது
எப்போது மூடுவது என்பது பற்றி
எல்லாம்...

எளிதல்ல


அனைத்தையும் விட்டு
ஓடுவது என்பது எளிதல்ல,
அறுத்துக் கொள்வது
என்பது வேடிக்கை அல்ல.

வலி .....
மரணவலி, ...........
சகித்துக்கொண்டே மறப்பதற்கு !!!

If you can......

If you can keep your head when all about you
Are losing theirs and blaming it on you;
If you can trust yourself when all men doubt you,
But make allowance for their doubting too;
If you can wait and not be tired by waiting,
Or, being lied about, don’t deal in lies,
Or, being hated, don’t give way to hating,
And yet don’t look too good, nor talk too wise

Yours is the Earth and everything that’s in it,
And - which is more - you’ll be a Man my son!

திரும்ப தோன்றுகிறது


உன்னை இழந்துவிட்டிருக்கும்
இக்கணத்தில் .......
திரும்பத் திரும்ப தோன்றுகிறது
உன்னை இன்னும் .......

சற்றே

அடைந்திருக்கலாமென !.

காதல் வைத்து


காதல் வைத்து காதல் வைத்து
காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும்
கேட்டிருந்தேன்
அசைந்தாய் !.....
அன்பே..
அசைந்தேன்.
அழகாய்
ஐயோ தொலைந்தேன்?

புலப்படவில்லை



என்ன யோசித்தும்
புலப்படவில்லை
நீயும் நானும்
செழித்து வளர வேண்டிய
இடைவெளி எதுவென்று

இடைவெளி


இடைவெளிகள் தான்
நெருக்கத்தைத்
தீர்மானிக்கின்றன
எனினும்
நெருக்கமற்ற
இடைவெளிகள்
பிரயோசனமற்றவை

ஆசை வளர்க்காதே

சந்திப்பதற்காக
இனியும்
ஆசை வளர்க்காதே......

வா....

அவரவர்
இடத்திலிருந்தே
புறப்படுவோம்!!!

சுட்டும் விழிச் சுடரே!




சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்


உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதில் பாதியும் போக!
உன் இமைகளின் கண் இமைகளின்
மின் பார்வையில் மீதியும் தேய!

ம்… இன்று நேற்று என்றும் இல்லை
என் இந்த நிலை.
ம்… உன்னை கண்ட நாளிருந்தே
நான் செய்யும் பிழை.

If you're with me.....


if ure with me, no anxiety will come to me.
if ure with me,light will never fade away.
if ure with me,even words will become songs.
if ure with me,there's no defeat for me.
if ure with me,i will never get displeased.
if ure with me,any difficulty is pleasure to me.

I Will Love You Forever!!!


I love you so deeply,
I love you so much,
I love the sound of your voice
And the way that we touch.
I love your warm smile
And your kind, thoughtful way,
The joy that you bring
To my life every day.
I love you today
As I have from the start,
And I'll love you forever
With all of my heart.

Because of you


Because of you
my world is now whole,
Because of you
love lives in my soul.
Because of you
I have laughter in my eyes,
Because of you
I am no longer afraid of good-byes.
You are my pillar
my stone of strength,
With me through all seasons
and great times of length.
My love for you is pure
boundless through space and time,
it grows stronger everyday
with the knowledge that you'll always be mine.
At the altar
I will joyously say 'I do',
for I have it all now
and it's all because of you.

ச்சீய் ...


ச்சீய் ...
இதைப் போயெல்லாமா
ரசிப்பார்கள் என கேட்கிறாய்
உனக்கென்ன தெரியும்
உன் ஈரமான இதழ் வரிகளின்
அழகு !!

மெளனம்


மெளனம் பேச்சாகும்
தனிமையில்
தூக்கம் எழுப்பும்
இரவுகளில்
வேட்கை நிரம்பிய
வெறுமையில்
கதகதப்பாய் அரவணைப்பது
உன் நினைவுகள்
மட்டும்தான்


பேச ஆர‌ம்பிக்கும்போது
பேச‌ம‌றுக்கிறாய்!
பேசிப்ப‌ழ‌கிய‌ பிற‌கு
பேச்சை
நிறுத்த‌ ம‌ற‌க்கிறாய்!.........

இயல்‌பாய்


எல்லோருக்கும் தெரியும்படி
முகத்தை திருப்பி
உன்னை பார்க்கிறேன் நான்!
யாருக்கும் தெரியாமல்
கண்களை திருப்பி
என்னை பார்க்கிறாய் நீ!
இயல்‌பாய் இருந்த‌ நீ,
நான் பார்ப்ப‌தை அறிந்ததும்
ப‌ர‌வ‌ச‌மாகி உன்
செய‌ல்க‌ளை மாற்றுகிறாய்!

ஆசைப்படவில்லை


அரியாசனம் ஏற ஆசைப்படவில்லை
வரலாற்றில் இடம் கேட்டும்
வருத்தப் படவில்லை.
நான் கேட்கும் இடமெல்லாம்-
நீ
தலை வைத்து தூங்குகின்ற
தலையணையில் தான்

அதனால்


பெண்ணே...
நான்
கோபத்தைக்கூட
அன்பாய்க் காட்ட
காரணம்...
நான்
முகம் பார்க்கும்
கண்ணாடி... நீ!

உன்னை உடைத்தால்
என்
முகம் அல்லவா
உடைந்து உடைந்து
தெரியும்.

சந்தேகத்தோடு கேட்கிறாய்


அவகூட பேசரப்போ என்ன
ஈஈன்னு இளிப்பு உனக்கு? என
சண்டை போடுகிறாய்
சரியென சிரிக்காமல் பேசினாலோ
அப்படி என்ன சீரியசா
பேசினே அவகூட
என சந்தேகத்தோடு கேட்கிறாய்

அப்படிப் பார்க்காதே


உன்னைத்தவிர வேற
எந்தப்பெண்ணையும்
பார்க்கக்கூடாதென
சண்டையிடுகிறாய்
சரி இனி பார்க்கமாட்டேன்
என உன்னைப்பார்த்தாலும்
‘அப்படிப் பார்க்காதே!’
என ஏற்படும் வெட்கத்தை
மறைக்க கோபமாக உன்
முகத்தைக் காட்ட நீ படும்பாடு
இருக்கிறதே !!

ஏன் கோபப்படுற?


ஏன் அடிக்கடி
நான் கோபப்படுற மாதிரி
நடந்துக்குறே என
நீ கேட்டபொழுது
கோபமா நீ இருக்கும் போது
உன் உதடு துடிக்கிறதைப்
பார்க்க அழகா இருக்கு
அதான் என நான் பயந்தவாறே
கூறிய பொய்யைக் கேட்டு
திடீரென ஏற்பட்ட உன்
வெட்கத்தை மறைக்க
முயன்றது உண்மையாகவே
அழகாக இருந்ததடி !

எனக்குத் தெரியும்


எனக்குத் தெரியும்..........
நீ சாப்பிடும் நேரத்தின்,
கடைசி குவளை!
தண்ணீரில் இருக்கிறேன்,
நான்......

ஆகவே


வீற்றிருக்கவும்..

வெளியேறவும்..

ஒரே கதவுதான்!

இமைகள் நான்கு என்ற

போதிலும்.
....
ஒரு கதவு மூடிக்கொண்டால்
இன்னொரு கதவென்பது
சாத்தியமில்லை..காதலில்.....

உணர்ந்தேன் உன்னால்


காதலை பற்றி கல்லூரி காலங்களில் எழும் விவாதங்களில்,
முதலில் எதிர்ப்பு கிளம்புவது என்னிடமிருந்தே..

நானும் அனுபவித்தேன்,
பசியில்லா நாட்களையும்
உறக்கமில்லா இரவுகளையும் உன்னால்...
அது ஒரு இனிய அனுபவம்.

வலியும் வேதனையும் தனக்கு வந்தால் மட்டுமே உணரமுடியும்,
எவ்வளவு பெரிய உண்மை என்பதை
என்னுள் நீ வந்த பின்புதான் உணர்ந்தேன்.

நீதான் கேட்டாய்,
எதுவாக இருந்தாலும் சொல் வெளிப்படையாக என்று... மறந்து விட்டாயோ!

ஏன்,
உனக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை என்றாய்?
காதல் உண்மை என்றால்...அது வாழ்வில் ஒரு முறைதான்.

மனதில் இருப்பவனை மணப்பதுதான் காதலில் சத்தியம்,
நீ யாரை வேண்டுமோ .....

நான் நினைத்தது உன்னை மட்டுமே,
சொந்தமானால் உனக்கு மட்டுமே...

என்றேனும் என் நினைவு தோன்றினால்,
உன் விழியின் ஓரத்தில் வடியும்
ஒரு துளி கண்ணீர் சொல்லும்,
உன்னிடம் என் காதலின் ஆழத்தை...!!


- மலர்கொடி



பொறாமை


முடிந்தவரை உன் வீட்டுக் கண்ணாடி முன்
நின்று என்னோடு உரையாடு எத்தனை தடவை
என்னை பொறாமை படவைத்தது என்று
எனக்குத்தான் தெரியும்

என் நரகமும் நீயே




இதுவரை நினைத்திருந்தேன்,
நீ மட்டுமே......

என் சொர்க்கம் என்று..
இப்பொழுதுதான்

உணருகிறேன்
என் நரகமும் நீயே என்று.....

இயன்றவரை முயன்றேன்


இயன்றவரை முயன்றேன்
உன் நினைவுகளை என்னுள்ளிருந்து எடுக்க..
என் சந்தோஷத்தில் தான்
உன் பெயரை உச்சரிக்கிறேன் என்றால்..
என் சோகத்திலும் உன் பெயரையே உச்சரிக்கின்றேன்..

நினைக்க வேண்டுமென நினைக்கும்போதைவிட,
மறக்க வேண்டுமென நினைக்கும் போதுதான் உணர்ந்தேன்,
உன் நினைவுகளையே சுவாசிக்கின்றேன் என்று..
என் உயிருடன் ஒன்றான
உன் நினைவுகளை எடுக்க இனியும் இயலாது...

ராஜா மகள்... ரோஜா மகள்....




நான் சமீபத்தில் பேருந்தில் பயணம் செய்தபோது இந்த பாடலை கேட்க நேர்ந்தது,

மிகவும் இனிமையாக இருந்ததால் அந்த பாடலின் வரிகளை இந்த இணையத்தில் பதிகின்றேன்.



ராஜா மகள்... ரோஜா மகள்....
ராஜா மகள்... ரோஜா மகள்...
வானில் வரும் வெண்ணிலா ... வாழும் இந்த கண்ணிலா...
கொஞ்சும் மொழி பாடிடும்.. சோலை குயிலா.......( ராஜா மகள்)

பன்னீரையும் வென்னீரையும்.....

உன்னோடு நான் பார்க்கிறேன்....
பூவென்பதா..... பெண்ணென்பதா..

நெஞ்சோடுதான் நான் கேட்கிறேன்...
முள்ளோடு தான் கள்ளோடு தான்..

ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடுதான் உன் பேரையும் சேர்க்கலாம.
கோபம் ஒரு கண்ணில்... தாபம் ஒரு கண்ணில்...
வந்து வந்து செல்ல... விந்தை யென்ன சொல்ல..
வண்ண மலரே.............( ராஜா மகள்)

ஆடைகளும் ஜாடைகளும் கொண்டாடிடும் தாமரை
வையகமும் வானகமும் கை வணங்கும் தேவதை
நீயும் ஒரு ஆணை இட.. பொங்கும் கடல் ஓயலாம்..
மாலை முதல் காலை வரை சூரியனும் காயலாம்
தெய்வ மகள் என்று தேவன் படைத்தனோ...
தங்க சிலை செய்து ஜீவன் கொடுத்தானோ..
மஞள் நிலவே.... (ராஜா மகள்)

என்னைப் பார்ப்பதாக இருந்தால்




நீ என்னைப்
பார்ப்பதாக இருந்தால்
நேராகப் பார்...
ஓரப் பார்வைகள்
வேண்டாம்.
என் இதயம்,
கொஞ்சம் பலவீனம்........

என்ன ஆச்சர்யமடி??


என்ன ஆச்சர்யமடி??

உன்னைப் பார்த்த பின்

பூக்கள் கூட......

நாணிக்கோணுகிறதே......!!!

மறந்து போகிறேன்


தேவையான

பலவிசயங்களை..

மறந்து

போகிறேன்.. நான்.

உனது நினைவுகளைத்தவிர.....

ஞாபகம் இருக்கிறதா ?


நானும் நீயும் ஒரே ரிங்டோன்
வைத்து இருப்பது அறியாமல்
யாருடைய மொபைலிலோ அழைப்பு
வந்தபோது நான் இருவருமே அவரவர்
மொபைலை எடுத்துப் பார்த்துவிட்டு
நீ என்னையும்
நான் உன்னையும்
பார்த்து வழிந்தோமே ?
அந்த முதல் சந்திப்பு உனக்கு
ஞாபகம் இருக்கிறதா ?


தோழிக்கு சொல்வதுபோல்
உன் மொபைல் எண்ணை
உரக்கச்சொல்லியது எனக்காகத்
தானே என நான் பிறிதொருநாள்
கேட்டபோது நீ அவசரமாக முறைத்து
மறுத்துவிட்டு
அப்படி போவதற்குள்
ஆமாம் என் மெசாஜ் அனுப்பினாயே
ஞாபகம் இருக்கிறதா?

முதன் முதலில் நான்
உன்னை மொபைலில் அழைத்தபோது
யாரென்றே தெரியாதது போல
ஆயிரம் கேள்வி கேட்டு
வெறுப்பேற்றினாயே
ஞாபகம் இருக்கிறதா ?

அவசரத்தில் நீ மொபைலை வைத்து
இருந்த இடத்தைப் பார்த்துவிட்டு
ஒரேயொருநாள் நான் உன்
மொபைலாக இருக்கிறேனே
என நான் கேட்டபோது
நீ கொட்டிய வெட்கத்தை
என் மனதினில் இன்னமும்
சேமித்து வைத்திருக்கிறேன்
தெரியுமா ?

எப்படி?


தூரத்தில் நீ வருகையில்
இதயத்தில் இருந்து எழுந்து
தொண்டை வரை வார்த்தையாக வருபவையும்
அருகில் நீ வந்ததும்
குரலாக மாறாமல் காற்றாக கலைந்து மறைகிறதே.

எப்படி?


விலக முடியாமல்
இறந்து போன என் இதயம் மீதேறி
காலம் பயணித்துக் கொண்டே இருக்கிறது
புதுப் புது மாற்றங்களோடு.

எப்படி?

கவிஞர் அறிவுமதி கவிதைகள்




கடற்கரையின்
முகம் தெரியாத‌ இரவில்
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்


நீ வயசுக்கு வந்துபோது
தடுமாறிய‌
என் முதல் கூச்சத்திற்கு
குட்டு வைத்து
நம் நட்பை காப்பாற்றியவள் நீ
எங்கு...


எப்படி...
எப்பொழுது தொடங்கியது
என்று தெரியாத
எல்லைகளற்ற நெடுவானம்
நம் நட்பு.

நீ


*

நீ
என் கண்ணீர்துளிகளின்
பிரதி!

*

நீ
மின்னல் வரைந்த
ஓவியம்!

*

நீ
காதல் வரைந்த
கடிதம்!

*

நீ
என் கண்ணீரின்
கடல்!

*

நீ
மௌனம் மொழியும்
கவிதை!

*

நீ
தேன் சுரக்கும்
பட்டாம்பூச்சி!

*

நீ
உயிர் சூடும்
பூ!

*

நீ
எழுதா
கவிதை!

*

நீ
என் காதலுக்கான
தண்டணை!

*
நீ
உயிர் நெய்யில் எரியும்
சுடர்!

*

இன்றும் நினைக்கிறேன்


இன்றும் நினைக்கிறேன்
என்றும் அவள்முகம்
எண்ணிப்பார்க்கையில்
மனதினில் நாணல்கள்

பலமுறை பார்க்கிறோம்
சிலமுறை முறைக்கிறாய்
திரும்பிப்பார்த்திட்டால்
யார் நீ என்கிறாய்?

நாட்கள் ஒடிட
நட்பாய் தொடங்கினோம்
நகரில் பல இடம்
சேர்ந்தே சுற்றினோம்

நட்புதான் என்றுநீ
சத்தியம் செய்கிறாய்
கடக்கும் பெண்ணினை
பார்த்தாலோ முறைக்கிறாய்

தொடங்கிடும் எல்லாமே
இப்படித்தான் என்றாலே
உடைப்போம் அதனையென
விடுதலை பேசினாய்

பேசும் பொழுதுகள்
வீசும் வார்த்தைகள்
நட்பெனும் வேலியை
தாண்டும் வெள்ளாடுகள்

வாய்கள் ஊமையாய்
ஆகும் பொழுதுகள்
கண்கள் தீர்க்குமே
வார்த்தையின் தேவைகள்

பார்த்தே கிடக்கும்
பொழுதுகள் வரமே
என்றே பொய்பேசி
கிடந்தோம் சுகமே

சின்னச் சண்டைகள்
தீரும் ஊடல்கள்
நெருங்கும் தருணங்கள்
பலதே தேடல்கள்

உண்மை அறிந்தும்
உணர மறுத்தோம்
என்ன உறவு ?
பின்னார் யோசிக்கலாம்

நாட்கள் ஓடிட
கொடுத்தாய் இதழில்
அழைப்பிதழ் என்று
உணரவே சிரித்தேன் !