காத்திருக்கிறேன்



இன்று,
கண்காணா எல்லையில்
நான் இருந்தாலும்...,


என் காட்சிகள்,
என்னவோ நீயாகவே....!


என் வருடங்கள் சுருங்கி,
தேகம் வதங்கினாலும்,


நினைவுகள் வதங்காமல்
நம் நாட்களைப் பூமாலையாக்கி
காத்திருக்கிறேன்.....!!


உன் வரவிற்காக.....................!!!