காத்திருப்பேன் உனக்காக!



உன் இதயத்தில்
ஓர் ஒதுக்குப் புறமாய்…
ஓர் மூலையில் கூட…
இடமில்லை என்று
தெரிந்த பின்பும்
இன்னமும் உன்னை நான்
அதிகமாய் நேசிக்கிறேன்.

நீ விலகி விலகிச் சென்றாலும்
விலாகாமல் உன் நினைவுகள்
என்னுள் விருட்சமாய் வளர்கின்றன..

என் முகம் பார்த்து
நீ முகம் சுழித்துச்
செல்லும் போதெல்லாம்
வலிக்கிறது இதயம்.

நீ என்னை
பார்க்காவிடிலும் பறவாயில்லை…
நீ என்னை
நேசிக்காவிடிலும் பறவாயில்லை…

காத்திருப்பேன் உனக்காக!