புரிவாயா நீ….!


குமுறி எழும் கண்ணீரை
கைக்குட்டைக்குள் புதைத்தபடி..
ஒரு முறை அல்ல
ஓராயிரம் முறை...
அடித்தடித்து.. சொல்லியாயிற்று..
நான் உன்னை நேசிப்பதாய்.

என் இதயத்தை பிளந்து பிளந்து
எத்தனை தடவை காட்டியுமாயிற்று..
உன் மீது நான் கொண்ட நேசத்தை
இதை புரிவாயா நீ….!

இந்த உலகில்
உனக்கு யாரைப் பிடிக்கும்

என்று
கேட்டால்…

என் விழிகள் இரண்டும்
உன்னை

நோக்கி
கணைகளை வீசும்.

என் சுண்டு

விரல் கூட....
உன்னை

நோக்கி நீண்டு
உன்னையே சுட்டிக் காட்டும்..

எப்போதாவது
என் நேசம்


உனக்கு புரியும்
என்ற

எதிர்பார்ப்பில்....!!!!!!