கவிஞர் அறிவுமதி கவிதைகள்




கடற்கரையின்
முகம் தெரியாத‌ இரவில்
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்


நீ வயசுக்கு வந்துபோது
தடுமாறிய‌
என் முதல் கூச்சத்திற்கு
குட்டு வைத்து
நம் நட்பை காப்பாற்றியவள் நீ
எங்கு...


எப்படி...
எப்பொழுது தொடங்கியது
என்று தெரியாத
எல்லைகளற்ற நெடுவானம்
நம் நட்பு.